states

img

உணவுக்கு பணம் கேட்ட 6 வயது சிறுவனை தலைமைக்காவலர் கொலை செய்த கொடூரம்

மத்தியப்பிரதேசத்தில் உணவுக்காக பணம் கேட்ட சிறுவனை தலைமைக்காவலர் கொலை செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மத்தியப்பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் ரத யாத்திரை திருவிழாவின் போது 6 வயது சிறுவன் ஒருவர் காவலரிடம் வந்து உணவுக்காக பணம் கேட்டிருக்கிறான். தலைமைக்காவலர் ரவி சர்மா தர மறுப்பு தெரிவித்ததால் மீண்டும் பணம் கேட்டுள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த காவலர் சிறுவனை அடித்து கழுத்தை நெரித்துள்ளார். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடலை யாரும் இல்லாத இடத்தில் வீசி விட்டு சென்றுள்ளார். 
இந்த விவகாரத்தில் தலைமைக்காவலர் ரவி சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். 
 இதுகுறித்து தாதியா மாவட்ட எஸ்.பி அமன் சிங் ரத்தோர், ரவியை உடனடியாக பணியில் இருந்து நீக்கும்படி காவலர் தலைமையகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் ரவி கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.